அடுத்த முப்பது ஆண்டு களுக்குள் உலகம் முழுவதும் உள்ள பவளப்பாறைகள் பூமியில் இருந்தே காணாமல் போய் விடும் என்று புதிய ஆய்வுகள் கூறு கின்றன. சர்வதேச அளவில் ஆய்வா ளர்கள் ஒன்றிணைந்து நடத்திய ஆய்வில் கால் சதவிகிதம் வரும் கடல் வாழ் உயிரினங்களின் வாழிடமாக இருக்கும் பவளப்பாறைகள் படிப்படியாக இல்லாமல் போய்விடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் இருப்பதிலேயே மிகப்பெரிய பவளப்பாறைகளான கிரேட் பேரியர் ரீப் (Great barrier reaf) கூட இன்று காலநிலை மாற்றம் மூலம் பெருமளவில் வெளுத்துப் போகும் (coral bleaching) நிகழ்விற்கு ஆளாகிக்கொண்டிருக்கிறது. புவி வெப்ப உயர்வு 1.5 டிகிரிக்குள் கட்டுப் படுத்தப்பட்டாலும் 90% பவளப்பாறை கள் அடுத்த முப்பதாண்டுகளில் அழிந்துபோய்விடும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த நாற்பதாண்டுகளில் கடல் வெப்ப உயர்வின் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளால் உலகில் எல்லா இடங் களிலும் இருக்கும் பவளப்பாறைகள் அழியத்தொடங்கின. கடல் வெப்பத் தில் ஏற்படும் மாற்றங்களை உடனடி யாக உணரும் திறன் பவளப்பாறை களுக்கு உள்ளது. முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற முன்னறிவிப்பை அவை நமக்கு அளிக்கின்றன.
பவளப்பாறைகளைக் காப்பாற்றுமா பாரிஸ் உடன்படிக்கை?
2015 பாரிஸ் உடன்படிக்கைபடி காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்ட குறிக் கோள்கள் நிறைவேற்றப்படாவிட்டால் 2050ஆம் ஆண்டுடன் பவளப்பாறை களின் சூழல் மண்டலமே தாறுமாறாகி விடும் என்று ஆய்வுக்குழுவின் விஞ்ஞானி மற்றும் லெஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜென்ஸ் சிங்கே கூறுகிறார். சில பவளப்பாறைகள் கடலில் மற்ற வற்றை விட சாதகமற்ற சூழ்நிலை களை மிக வேகமாக சமாளிக்கின்றன. இவை காணப்படும் பிரதேசங் களைக் கண்டுபிடித்து இவற்றை எதிர்காலத்திற்காக பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். எண்ணற்ற அரிய பல கடல்வாழ் உயிரி னங்களின் வாழிடமாகத் திகழும் பவளப்பாறைகளை பாதுகாப்பதற் குரிய பரிந்துரைகளை ஆய்வுக்குழு வினர் வழிகாட்டு நெறிமுறைகளாக வெளியிட்டுள்ளனர். இது பவளப்பாறைகளை வருங் காலத்திற்காகப் பாதுகாக்கும் சரணா லயங்கள் (Forecasting climate sanctuaries for securing the future of coral reafs) என்ற பெயரில் ஆய்வறிக்கையாக வெளியிடப் பட்டுள்ளது. ஆட்சியின் உயர் பீடத்தில் அமர்ந்து அதிகாரம் செலுத்தும் அரசியல்வாதிகள் முதல் சாதாரண மனிதன் வரை பூமியின் ஒட்டுமொத்த மனிதகுலமும் சூழல் காக்க அவரவரால் முடிந்ததைச் செய்தால் மட்டுமே கடலின் மழைக்காடுகளான பவளப்பாறைக்கூட்டங்களை நம்மால் காப்பாற்றமுடியும்.
-சிதம்பரம் இரவிச்சந்திரன்